Hello, I’m Veronica
The sky is not completely dark at night. Were the sky absolutely dark, one would not be able to see the silhouette of an object against the sky.
-
மண்ணுளி பாம்பு
மண்ணுளி ஒரு முன்னோட்டம்
மண்ணுளி பாம்பு ஒரு பாம்பு வகையை சேர்ந்தது என்பது பலரின் கருத்து, ஆனால் நம்ம ஊர் விவசாயிகள் இது புழு வகையை சார்ந்தது என்று குறிப்பிடுகின்றனர். இவைகள் வயல்வெளிகளிலும், மணற்பாங்கான நிலங்களிலும், காடுகளிலும் வாழ்கின்றன.இது எப்போதும் மண்ணுக்குள்ளே தன் உடலை மறைத்துக்கொண்டு வாழ்வதால் மண் பாம்பு, மண்ணுளிப்பாம்பு என பெயர் பெற்றது. , இதன் உணவே எலிகள் மற்றும் இயற்கை கழிவுகள் தான். இதனால் இது நீண்ட நாள் உணவில்லாமல் வாழும் தன்மை உள்ளது. இதன் கழிவுகள் வயல்களுக்கு உரமாக பயன்படுகிறது. இதனால் தான் இதனை விவசாயிகளின் உற்ற நண்பன் என்று அழைக்கின்றனர். இதுவரை இந்த மண்ணுளிகள் யாரையும் கடித்ததாக தெரியவில்லை. மண் பாம்பு கடித்தால் தோல்வியாதி வரும் என்பது வெறும் கட்டுக்கதை என்றே கூறவேண்டும். இதன் காரணத்தை பின் பார்ப்போம்
வேறு பெயர்கள்
இதற்கு மண்பாம்பு, மண்ணுளி பாம்பு, சிவப்பு உழவன் பாம்பு, இருதலைமணியன் பாம்பு, இருத்தலை பாம்பு என்று பல பெயர்கள் உண்டு.
இனப்பெருக்கம் :
இது குட்டிபோட்டு தன் இனத்தை பெருக்குகின்றன. ஒரு நேரத்தில் 5 முதல் 8 குட்டிகள் வரை போடும். விஷத்தன்மை அற்றது.
இது ஒரு சாதுவான உயிரினம், இதுவரை இந்த மண்ணுளிகள் யாரையும் கடித்ததாக தெரியவில்லை. மண் பாம்பு கடித்தால் தோல்வியாதி வரும் என்பது வெறும் கட்டுக்கதை என்றே கூறவேண்டும். எண்ணிக்கையில் பத்து இருந்தாலே போதும், ஒரு சில ஏக்கர் நிலத்தில் விளைச்சல் அமோகமாக இருக்கும். இதன் காரணத்தை பின் பார்ப்போம் .
அரசியல் :
பொதுவாக மண்ணுளி பாம்பு என்பது ஒரு விலையுர்ந்தஉயிரினம் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் காரணம் இதிலிருந்து தயாரிக்க படும் மருந்து, ஆண்களில் விந்தணுக்களை அதிகரிக்கும் என்றும், கேன்சர் நோய்க்கான மருந்து என்றும் உலகளவில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் தான் இதன் விலை 40~50 லட்ச ரூபாய் வரை விற்கப்படும் ஒரு உயிரினம். இந்த கட்டுக்கதை சுமார் 5~10 ஆண்டுகளுக்குள் தான் பரப்பப்பட்டு வருகிறது.
சரி இதன் உண்மை நிலை என்ன என்று ஆராய்ந்தேன் இதற்கு வலைத்தளத்தில் எந்த குறிப்பும் இல்லை, ஒரு சில காணொளிகளை தவிர, வலைத்தளத்தில் உலா வந்தால், இதன் சிறப்பும், இதன் விசத்தன்மையும் தான் உள்ளது
இதன் பின் ஒளிந்துள்ள கார்பொரேட் முதலாளிகளின் சூட்சமம் வெளிவருகிறது. முன்பெல்லாம் இயற்கை விவசாயம் தான் இந்தியாவில், இதனால் விவசாயம் வருமானம் மிகுந்த ஒரு தொழிலாக இருந்தது, அதை ஒழிக்கவே கார்பொரேட்கள் விவசாய துறையை தேர்வு செய்தது. அதனால் தான் இதன் விலையை 40~50 லட்சமாக வைத்தது, ஆனால் அதிலும் க் வைத்தது. இந்த மண்ணுளி பாம்புகள் 4முதல் 5கிலோ வரை இருக்க வேண்டும். ஆனால் இது கூச்ச சுபாவம் கொண்டதால் இது அதன் எடையை இழக்கும். இதனால் விற்க முடியாமல் போகும். அதுவும் இன்றி இடமாற்றம் நடைபெறுவதால் இது அழிந்து போகவும் வாய்ப்பு உள்ளது.
கார்பொரேட் முதலாளிகளிக்கு இதை வாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களின் ஒரே நோக்கம் இந்த வகை புழுக்கள் அழிய வேண்டும். மண்ணுளி பாம்பு அழிந்தால் உரம் கிடைக்காது, செயற்கை உரம் தேவை, அதற்கு கார்பொரேட் நிறுவனம் வரும் முதலில் இலவசமாகவும், பின் சிறிது சிறிதாக விலை உயர்த்தியும் கடைசியில் இந்த உரம் இல்லை என்றால் விளைச்சல் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு உரத்தை விற்று வருகின்றனர். இதை அறியாத பலர், பேராசையில் பணத்தை இழக்கின்றார்.
மீண்டும் இயற்கை உரத்துக்கு மாறினால் இரண்டு போகம் நட்டம் அடையும் ஆனால் அதன் பின் அதிக விளைச்சல் கொடுக்கும், ஆனால் விளைச்சல் குறைந்தாலே விவசாயிகள் தயங்கி மீண்டும் செயற்கை உரத்திற்கு மாறுவது தான் கார்பொரேட்களின் வெற்றி.
இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம், நீண்ட ஆயுளை பெறுவோம் என்ற நம்பிக்கையோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்
-
தமிழர்களின் கட்டிட கலைகள்
பகுதி -3
பகுதி -1 : தமிழர்களின் கட்டிட கலைகள்
பகுதி -2 : தமிழர்களின் கட்டிட கலைகள் பகுதி II
கடந்த இரண்டு பகுதியில் சிதம்பர நடராஜர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், கல்லணை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். இந்த பகுதியில், மேலும் சில கட்டிட கலைகளை பற்றி தான் பார்க்க போகிறோம் .
ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்:
இக்கோவில் கும்பகோணம் அருகில் உள்ளது. இதை இரண்டாம் இராச இராச சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலையும் சேர்த்து, தஞ்சை பெருவுடையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் இம்மூன்றும் சோழ இராஜ்யத்தின் கலைகளை எவ்வாறு வளர்த்து வந்தனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இக்கோவிலை இரண்டாம் இராச இராசன் தலைமையில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.ஐராவதேசுவரர் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியது தான், இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன.
ராஜகம்பீரன் மண்டபம்:
ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.
குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இசை எழுப்பும் தூண்கள்:
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்கு இருக்கும் தூண்களை தட்டும் போது, சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. இத்தூண்கள் வெவ்வேறு கணங்களில் இருக்கின்றன.
சிற்பங்கள் :
கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. மற்ற கோவில்களில் காணப்படாத ஒரு சில சிற்பங்கள் இங்கு வடிவமைக்க பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் உள்ளன. மேலும், வல்லுனர்களால், “சிற்பிகளின் கனவு” என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும்.இது போன்று சிற்பங்கள் இருப்பதால் தான் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO) இக்கோவிலை 2004-ல் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க பட்டுள்ளது.
கங்கைகொண்ட சோழீசுவரர், கங்கை கொண்ட சோழபுரம்
மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்.
கட்டிட அமைப்பு:
இக்கோவில் தஞ்சை பெருவுடையார் கோவிலை போன்றே உயரமான கோவிலை கட்டவேண்டும் என்று எண்ணி வடிவமைக்க பட்டது. இக்கோவிலின் உயரம் 560 அடி (170 மீ) , அகலம் 320 அடி (98 மீ) கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக் கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளார். முற்றத்தின் முக்கியப்பகுதி கிழமேற்காக 104 மீ (341 அடி) by 30.5 மீ (100 அடி) அளவுகொண்டுள்ளது. லிங்கத்தின் உயரம் 4 மீ (13 அடி) அடிப்பகுதியின் சுற்றளவு 18 மீ (59 அடி). 100 ச.அடி (9.3 மீ2) அளவுள்ள கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி (1.8 மீ) உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையின் மீதுள்ள விமானத்தின் உயரம் 55 மீ (180 அடி); இவ்விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் விமானத்தைவிட 3 மீ (9.8 அடி) உயரம் குறைவானது. பெருவுடையார் கோயில் விமானத்தின் அடுக்குகள் நேரானவையாகும் இக்கோயில் விமான அடுக்குகள் வளைவாகவும் உள்ளன. மற்றெந்த சிவன் கோயில்களிலும் உள்ள இலிங்கங்களைவிட, 4 மீ (13 அடி) அடி உயரமுள்ள இக்கோயில் இலிங்கம் மிக உயரமானதாகும்.
நந்தி:
கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு நந்தி 200 மீ (660 அடி) அமைக்கப்பட்டுள்ளது. கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி (2.9 மீ) ஆகும். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.
சோழர் கலைகள்:
சோழர்காலத்தில் சிறப்பு பெற்ற கலைகளை சோழர் கலைகள் எனலாம். கட்டடக்கலையும் சிற்பக் கலையும் வண்ண ஓவியக்கலையும் பெரும்பாலும் பொதுக் கட்டடங்களிலும் குறிப்பாகக் கோயில்களிலுமே வளர்க்கப்பட்டன. கோயில்கள் அல்லாத ஏனையவைகளான அரண்மனைகளும் மாளிகைகளும் பெரும்பாலும் அடியோடு அழிந்துவிட்டன. விதிவிலக்காக உத்தரமேரூர் போன்ற இடங்களில் இவற்றை விரிவாக ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் சோழர்கள் கட்டிய கோயில்கள் மிகப் பிரம்மாண்டமானவை; தலை சிறந்தவை; வெளிநாட்டார் கூட வியப்படையும் வண்ணம், தமிழ்நாட்டின் கலைத் திறமையை நிலைநாட்டும் நிறுவனங்கள்; அவற்றின் மூலம் தமிழர் கண்ட ஒரு பேரரசின் ஆற்றலையும் பெருமிதத் தோற்றத்தையும் அவர்கள் உலகத்திற்கு அறிவித்தார்கள்.
மேலும் சில கட்டிட கலைகளை பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன். விரைவில் அடுத்த பாகம் வெளியிடுகிறேன்
-
கீழடி
கீழடி கிராமம் (Keezhadi) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள கிராமம் . மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய தொல்லியல் துறை சார்பில் மதுரையிலிருந்து இராமநாதபுரத்தின் – அழகன்குளம் துறைமுகத்துக்குச் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற ஊரின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ள பள்ளிச்சந்தைத் திடல் என்ற பெயரிலான மண்மேட்டில் இவ்வகழாய்வு தொடங்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றி நிலத்தை உழும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் அவ்வளவாக பாதிப்புக்குள்ளாகாது இருந்த இம்மேடு ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சி :
இந்தியத் தொல்லியல் துறை சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அதற்கு பழமையான பொருட்களும் கண்டறிய பட்டன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டைகள், சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன. அதிலும், தாயக்கட்டைகள், சதுரங்க காய்கள், சீப்புகள், அணிகலன்கள் அனைத்தும், யானை தந்தங்களால் ஆனவை.
மேலும், வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு இருந்தன , மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.
தமிழக-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.அப்படியெனில், அருகில் துறைமுகம் இருந்து இருக்க வாய்ப்பு உண்டு. மேலும், இங்கு சீன, எகிப்திய வணிக தொடர்பும் இங்கு நடைபெற்றுள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.
ஆய்வாளர்கள்:
முதல் கட்ட அகழ்வாய்வின் போது, கீழடி அகழாய்வினை இந்தியப் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு செய்து வருகிறது. அப் பிரிவினைச் சார்ந்த கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை வகித்தார் . மேலும் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இந்த ஆய்வில் பங்கெடுக்கின்றார்கள். துணைப் பேராசிரியர் பி. வெங்டேசுவரன், கே. வடிவேல், கே. வசந்தகுமார். டி பாலாஜி, ஆர். மஞ்சுநாத், ஜி. கார்த்திக் ஆகியோரைக் கொண்ட வல்லுனர் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார். கல்வெட்டியலாளர் வி. வேதாச்சலம் துறைசார் வல்லுனராகக் (Subject Matter Expert) ஆகியோர் இதில் பணியாற்றினார்.
முதல் கட்ட அகழாய்வு :
2015 ஜூன் மாதம் முதல் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வை தொடங்கியது.
0.5 மீட்டர் ஆழம் கொண்ட 42 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடந்தது. நவம்பர் வரை நடந்த அகழாய்வில் ஆயிரத்து 600 பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று உறைகிணறுகள், 350 பானை ஓடுகள், 32 பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், 800 கண்ணாடி மணிகள், இரண்டு பெரிய சுவர்கள், மூன்று சங்க கால நாணயங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. அதன்பின் 2016 ஜனவரி மாதம் 2 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்கால கிணறு, தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. உலகிலேயே மூத்த இனம் தமிழனம் என உறுதிப்படுத்த கூடிய பல்வேறு சான்றுகள் கிடைத்தன.
இரண்டாம் கட்ட அகழாய்வு:
2016 ஜனவரி மாதம் 2-ம் தேதி அன்று இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. இதிலும், அதே வல்லுநர்கள் பணியாற்றினார்.
இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டம்:
மூன்றாம் கட்ட அகழாய்வு சனவரி, 2017 முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெறுகிறது. இப்பணி 30 செப்டம்பர் 2017ல் முடிந்தது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
இன்று மத்திய தொல்லியலாளர் ஸ்ரீராமன் தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் வீரராகவன், ராஜேஷ், வேதாசலம் ஆகியோரது முன்னிலையில் தொடங்கியது.பல்வேறு பிரச்னைகள் காரணமாக மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு மாற்றப்பட்டு ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார். ’இது தமிழன் வரலாற்றை மறைக்கும் செயல்’ என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 3 ஆம் கட்ட அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் இந்த அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஏற்கெனவே அகழாய்வு நடந்த இடத்தை ஒட்டி 50 மீட்டர் தொலைவில் ராமதாஸ் என்பவரின் தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக ஆறு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
நான்காம் கட்ட அகழாய்வு:
இரண்டாவது கட்ட அகழ்வாராய்ச்சிப் பிறகு, பல்வேறு தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டம், இந்த கீழடி பற்றிய தகல்வல்கள் சமூக வலைத்தளங்களில் பேச பட்டதாலும், தமிழ்நாடு மாநில அரசு தொல்பொருளியல் துறை இந்த அகழாய்வை தொடங்க வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏ.எஸ்.ஐ.) தமிழகத்தின் பழங்கால தமிழ்நாட்டின் உண்மையான சரித்திரத்தை வெளிப்படுத்தாது எனக் கூறி அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியது.
பல கோரிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, தொல்பொருளியல் துறை, ஏ.எஸ்.ஐ. உடன் கைகோர்த்தது. நான்காவது கட்டத்தில் அகழ்வாராய்ச்சிக்கு ரூ. 55 லட்சம் ஒதுக்கப்பட்டு, பின்னர் அரசுக்கு ஒதுக்கப்பட்டது.
நிதி வெளியீட்டிற்குப் பிறகு, ஏப்ரல் 18 ம் தேதி கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது, கடந்த இரண்டு மாதங்களில் தங்கம் உட்பட 3,000 கலைப்பொருட்கள் உட்பட, கண்டுபிடிக்கப்பட்டன.
முந்தைய ஆண்டுகளுக்கு ஒத்ததாக, 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 16 அகழ்வாராய்ச்சல் தொடங்கியது, சந்திரன் என்ற பெயரில் கீச்சடியில் உள்ள சரணாலயத்தில் அகழ்வாராய்ச்சிக்காக தோண்டியெடுக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆச்சரியப்படுவதற்கு, ஒரு பெரிய அளவிலான கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன, எனவே துறை 1.5 ஏக்கர் நிலத்தை பெற முடிவு செய்தது. மேலும் 1.5 ஏக்கர் நிலம் தற்போது கார்த்திக் என அழைக்கப்படும் ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது, மேலும் புதிய தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்பொழுது, இரு தளங்களிலும் அகழ்வாராய்ச்சி வேகமாக நடைபெறுகிறது, முதல் இரண்டு மாதங்களில் சுமார் 3,000 கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முதல் மூன்று கட்டங்களைப் போலல்லாமல், அங்கு ஏராளமான வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, நான்காவது கட்டத்தில், ஒரே ஒரு கிளை மட்டுமே காணப்பட்டது.
இருப்பினும், வழக்கமான மண்ப்பாண்டம் மற்றும் மணிகளைக் காட்டிலும் செங்கல் அடுப்புகளைப் போன்ற கட்டமைப்புகள் காணப்படுகின்றன.ஆனால் முதல் தடவையாக, வெள்ளியன்று முதல் தளத்தில் இரண்டு குளங்களில் இருந்து பெரிய அளவிலான தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தங்கம் கிராமத்தில் இருந்து சோதனைக்கு மாற்றப்பட்டுள்ளது, அதிகாரி கூறினார்.
செப்டம்பர் வரை அகழ்வாய்வு தொடர்ந்தால், 8,000 க்கும் அதிகமான கலைப்பொருட்கள் இரு தளங்களிலிருந்தும் அகற்றப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நான்காவது கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கலைப்பொருட்கள், மூன்று கட்டங்கள் இணைந்திருக்கும் போது அதிக எண்ணிக்கையில் இருக்கும்.
அரசியல்:
கீழடி அகழாய்வு இரண்டு கட்டங்களுக்கு மேல் செல்ல விடமால் சில அரசியல் நடைபெற்றது. இருப்பினும், முதல் இரண்டு கட்ட அகழாய்வு பணியில் ஈடுபட்ட திரு. கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை பற்றியும், அதன் பின் உள்ள தமிழர்களின் வரலாறு மற்றும் நாகரிகம் பற்றியும் சமூக வலைத்தளங்களில் கூறியதினால் கீழடி பற்றி மக்களுக்கு தெரிய வந்தது. மேலும் இதற்கு முன் தமிழகத்தில் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் இது தான் பெரியது. மேலும், திரு. கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை தமிழகத்தில் இருந்து, அசாம் மாநிலத்துக்கு மாற்றியது மத்திய அரசு. அது மட்டுமின்றி முதல் இரண்டு கட்ட அகழாய்வு 2300 ச.மீ அளவுக்கு தோண்டி நடத்தப்பட்டது. பல்வேறு போராட்டம், நீதிமன்றம் தலையிட்டால் போன்ற பிரச்சனைகளால், மூன்றாம் கட்ட அகழாய்வு சும்மா பேருக்கு நடத்தப்பட்டது.
அதிலும், இரண்டு அகழாய்வுகளில் கண்டுதெடுக்க பட்ட பொருளுக்கும், மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டுதெக்க பட்ட பொருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றது இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI). ஆனால் மூன்றாம் கட்ட அகழாய்வில் வெறும் 400 சதுர மீ அளவுக்கு தான் தோண்ட பட்டது.கீழடி நாகரிகம் முற்றிலும், வேதங்கள் அல்லாத, ஆரியன் அல்லாத ஒரு நாகரிகம், இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் யாவும், மனிதர்களை குறித்தே உள்ளன. இதில் கடவுளை சார்ந்த எந்த ஒரு பொருளும் கிடைக்க வில்லை. மேலும், பெண்கள் இங்கு எழுத்து, ஓவியம் போன்றவற்றில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதே இங்கு கிடைக்க பெற்ற பொருட்கள் கூறும் உண்மை.
இந்த நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்னாள் உருவானது என்பதை மட்டும் நிரூபிக்கபட்டால், ஆரியன் இது வரை கட்டிவைத்த கோட்டை மொத்தமாக சிதைந்து விடும் என்பது தான் மத்திய அரசுக்கு இருக்கும் கவலை.
இந்திய அரசு இதுவரை தங்களது வரலாற்றை வேதங்களாலும், புராணகளாலும், தான் கட்டியமைத்துள்ளது. இப்படி ஒரு நாகரிகத்தில் பெண்கள் இப்படி திறமை வாய்ந்தவர்கள், கடவுள் வழிபாடு கிடையாது, சாதாரண மக்கள் கூட யானை தந்தங்களால் ஆனா பொருட்களை வைத்து கொண்டு இருந்தார்கள் என்றால் செல்வம் கொழிக்கும் நாகரிகம், ஓவ்வொரு வீட்டிற்கும் கழிவறை, சாலை அமைப்பு, நீர் வழி சாலை, கழிவு நீர் பாதை என்று அந்த நாகரிகம் வெளிவந்தால் இந்திய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறே மாற்றி அமைக்கபடும். இதன் காரணமாக தான் மத்திய அரசு (இந்திய அரசு) தமிழனை தலை நிமிர விடாமல் பார்த்து கொள்கிறது.
-
வீரம்
நம் தலை முறைக்கு வீரத்துக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் நாம் வளர்த்து இருக்கிறோம். வீரம் என்பது ஒருவனை அடித்து காயப்படுத்துவது இல்லை, வீரம் வெற்றியை மட்டுமே கொடுப்பதில்லை. வீரம் என்பது ஒரு செயலை துணித்து செய்வது. வீரம் என்பது தோல்வியை கண்டு அஞ்சாமல் இருப்பது. வீரம் என்பது தன் உயிர் போகும் நிலையிலும் மற்றவர் உயிரை காப்பது வீரம்.
ஒரு சில எடுத்து காட்டுதலுடன் இக்கதையை ஆரம்பிக்கிறேன்.
சாலையில் இருவர் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள், அவ்வழியே சென்ற ஒரு இளைஞன் அவர்களை தடுத்து அந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தான். மேலோட்டமாக பார்த்தால் அந்த இளைஞன் சண்டையை பிரித்து வைத்தான் என்று தோன்றும், ஆனால் உற்று நோக்கினால், அந்த இளைஞன் இருவர் அடித்து கொண்டு இருக்கும் பொது துணிந்து சென்று தன் மீது இரண்டு அடி வீழ்ந்தாலும் பரவில்லை, என்று சண்டையை பேசி முடிவைத்தானே அது தான் வீரம், இதில் அவனின் துணிவு, பேச்சு திறமை, வீரம் மூன்றும் தெரிகிறது.
இன்று பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள். சாலையில் எதாவது சண்டை நடந்தால் நமக்கென்ன என்று செல்வது மட்டுமல்லாமல் தன் குழந்தையையும் உள்ளே அழைத்து செல்கிறார்கள். இதனால் அவனுக்கு வீரத்துக்கும், வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது. ஆண்களுக்கு சிறு வயதில் காது குத்தும் வழக்கம் இருக்கும், இன்னும் தென் தமிழகத்தில் காது குத்தவில்லை என்றால் திருமணம் நடக்காது என்று வழக்கம் உள்ளது, இன்று வரை. அதற்கு காரணம் நம் தமிழர்கள் வீரர்களுக்கு மட்டும் தான் பெண் கொடுப்பார்கள். காது குத்துவதற்கும், வீரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், போரில் கலந்து கொண்டு, நெஞ்சில் காயம் வாங்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் காதில் ஓட்டை போட்டு கொள்வார்கள். அப்படி பட்ட வம்சம் நம் தமிழர்களின் வம்சம்.
அது என்ன நெஞ்சில் காயம் இருந்தால் அவன் வீரனா என்று கேட்டால், சாவை நேருக்கு நேர் கண்டு அஞ்சாமல் இருப்பவனும் வீரனே, அது தான் தமிழர்களின் மரபு.
அரேபிய நாடு பக்கம் அலி என்ற பெயர் பிரபலம், அந்த அலி என்பவர் வீரம் மிக்கவனும், பலசாலியாகவும், இருந்தார். இங்கு எப்படி, பீமன் என்ற கதாபாத்திரமும், அனுமான் என்ற கதாபாத்திரமும், பலசாலியாக உள்ளதோ, அதே போன்று தான். ஆனால் அலி என்பவர் உண்மையில் வாழ்ந்தவர்.
அப்பொழுது அரபு நாட்டுக்கும், யூதர்களுக்கும் போர் நடந்து கொண்டு இருந்தது, அந்த போரில் அலி-யும் , யூதர்கள் பக்கம் ஒரு வீரனும் (பெயர் தெரியவில்லை) சண்டை போட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த யூத வீரனிடம், இரண்டு பக்கமும் வெட்டும் வாள் இருந்தது, அதை கொண்டு எதிரில் வருபவரை வெட்டி வீழ்த்தினான், அந்த சமயம், அவன் குதிரை-ன் தலையும் வெட்டு பட்டு கீழே சரிந்தான் யூத வீரன். யுத்த தர்ம படி, அலி-யும் கீழே இறங்கினான், இருவருக்கும் சண்டை பலமாக நடக்கிறது. கடைசியில் அந்த யூத வீரனை வீழ்த்தி கழுத்து அருகே தன் வாளை கொண்டு செல்லும் போது, திடீர் என்று விலகி விடுகிறான் அலி. அந்த யூத வீரன், உன் உயிர் பிச்சை எனக்கு தேவையில்லை, என்னை கொன்று விடு என்று கொக்கரிக்கிறான். அதற்கு அரேபிய வீரன் அலி, இன்று வேண்டாம், நீ நாளை வா என்று சொல்கிறான், இல்லை இந்த சண்டை இன்றே முடிவடைய வேண்டும் என்று சொல்கிறான். அப்பொழுது அலி கூறுகிறான், நீ என்ன செய்தாய், நாம் சண்டை போட்ட பிறகு உன்னை வீழ்ந்தி உன் கழுத்தில் கத்தி வைத்த பொழுது, என் முகத்தில் உமிழ்ந்தாய் அல்லவா, ஆம் என்றான் அந்த யூத வீரன். நீ உமிழ்ந்ததால், அது உனக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை யாக மாறிவிட்டது, இது போர் களம் இங்கு உன்னை வீழ்த்தி விட்டேன், என் தனி பட்ட பிரச்சனையை நாளை பார்த்து கொள்வோம் என்று கூறினான்.
இந்த கதையை எதற்கு பதிவிட்டேன் என்றால், வீரம் என்பதற்கும், வன்முறைக்கும் உள்ள வித்தியாசம் தெரியவேண்டும் என்பதற்காக. அரபிய வீரன் அந்த யூத வீரனை அங்கேயே கொன்று இருந்தால் அது வன்முறை, ஆனால் அந்த தனிப்பட்ட பகையை நாளை பார்க்கலாம் என்று சொன்னானே, அது வீரம்.
இங்கும் பல வீரர்கள் வாழ்ந்தார்கள், அவர்களில் சிலர், பெரியார், அறிஞர் அண்ணா, ஐயா முத்துராமலிங்கம், வீரமங்கை வேலு நாச்சியார், சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் என்று நீண்டுகொண்டே போகும்.
இனியாவது வரும் தலைமுறைக்கு வீரம் என்பதற்கும், வன்முறைக்கும் உள்ள வித்யாசத்தை பிரித்து காட்டுவோம்.வீரம் தமிழர்களின் மரபு, வீரம் தமிழர்களின் உயிர்.
நன்றி
-
தமிழகத்தின் இல்லுமினாட்டிகள்
பகுதி – II
சென்ற பகுதியில், இல்லுமினாட்டிகள் யார்? இரகசிய அமைப்பு உருவான காரணம், தமிழகத்தை பிடிக்க முடியாத காரணம் பார்த்தோம். அந்த பகுதியின் இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இல்லுமினாட்டிகள் – பகுதி – I
தமிழகத்தின் இல்லுமினாட்டிகள் என்று நான் குறிப்பிடுவார்கள் பழுவேட்டரையர்கள் தான். என்ன இவர்கள் உலகத்தை ஆள நினைக்கவில்லை, மாறாக தமிழகத்தை காக்க நினைத்தார்கள். இது எப்படி இதனை நாள் வெளியே தெரியவில்லை என்று உங்களுக்கு தோன்றலாம், ஆம் அதை மறைத்து வைத்து தான் இருந்தார்கள் இரண்டு பிரிவை சேர்ந்தவர்களும், பழுவேட்டரையர்களும், இஸ்ரேல் மறைமுக அமைப்பை சேர்ந்தவர்களும். காரணம், உலகத்தை பிடிக்க முடிந்த அவர்களால், என்ன தமிழகத்தை பிடிக்க துப்பு இல்லை என்று யாரும் எண்ணிவிட கூடாது என்று.
இந்த பழுவேட்டரையர்கள் யார், இவர்கள் எந்த இராஜ்யத்தின் இரகசிய அமைப்பு அல்லது பாதுகாவல் அமைப்பு. என்று பார்க்கலாம். பழுவேட்டையர்கள் சோழ இராஜ்யத்தின் பாதுகாப்பு அமைப்பு, சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் தொடரை படித்தவர்களுக்கு இவர்களை பற்றி தெரிய வாய்ப்பு உள்ளது, ஆனால் அது சிறு தொகுப்பு தான். அவர்களை பற்றியும், அவர்கள் தமிழகத்தை காக்க என்ன செய்தர்கள் என்பதை பற்றியும் தான் இந்த தொடர்.
பழுவேட்டரையர்கள் சோழ வம்சத்தின் உண்மை பாதுகாவலர்கள். சோழர்களுக்கு தமிழகமும், தமிழர்களும் தான் உயிர், அதை அறிந்து தான் சோழ வம்சம் அழிந்த பின்னரும் தமிழகத்தையும் அவர்கள் காத்து வந்தனர். ஆனால் அதற்கு அவர்கள் வகுத்த வியூகங்கள் அதிகம், அதன் பயன், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காத்து வந்தனர். என்னடா இது 9 வருடம் முன்பு வரையா என்று தோன்றுகிறதா?
ஆம், சரியாக சொல்ல போனால் மே 18, 2009 அன்று தான் அனைத்தையும் அழித்து தமிழகத்தையும் பிடிக்க கை எட்டும் அளவிற்கு வந்தார்கள் இஸ்ரேல் இரகசிய அமைப்பினர். (அவர்களை இல்லுமினாட்டிகள் என்று அழைக்க மாட்டேன்) காரணம் பழுவேட்டரையர்கள்-ன் பகடை காய்கள் அனைத்தும் அழிந்துவிட்ட நிலையிலும், மீண்டும் உருவாகும் முயற்சியிலும் உள்ளனர் அவர்கள். (இவர்களை இல்லுமினாட்டிகள் என்று அழைக்கலாம்)
சோழ ஆட்சிக்கு பிறகு, அவர்கள் தமிழகத்திலேயே தங்கி இருந்தனர். அப்பொழுது தமிழகத்தின் மீது நடைபெற்ற கொடுமைகளை தாங்கிக்கொள்ளாமல், ஒரு வியூகத்தை வகுத்தனர் பழுவேட்டரையர்கள். அதற்கு அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டும் என்று முடிவு எடுத்தனர். மன்னர் ஆட்சி முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை பல முயற்சிகளை செய்து காத்த போதிலும், முயற்சிகள் அனைத்தும் தவிடு பொடியாக்கினார். காரணம் அப்பொழுது அவருக்கு என்று தனி அமைப்பை ஏற்படுத்தாமல் ஒரு சிலரை வைத்து செயல்களை நகர்த்தினார். அதன் பின் தான், இஸ்ரேல் இரகசிய அமைப்பின் செயல்களை தகர்க்க ஒரு ஆயத்ததை உருவாக்கி, ஒரு அமைப்பை உருவாக்கினார்.
இதற்கு பலரும் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவரும், வடதேசத்தை சேர்ந்தவரும் உதவினர். பழுவேட்டரையர்கள் உருவாக்கிய ஆயுதத்தின் பெயர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை சிறு வயது முதலே, தமிழ் உணர்வு வருமாறு வளர்த்து வந்தனர். அவர் பள்ளி பருவத்திலேயே தமிழ் மொழியின் மீதும், ஈழத்தில் தமிழர்கள் மீது நடக்கும் கொடுமைகளை சொல்லி சொல்லி வளர்த்தனர். பின் கல்லூரி காலத்திலேயே தமிழர்களின் மீதான நடக்கும் வன்முறைகளை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினர். பின் அவர் தயார் ஆனா நிலையில் ஈழத்தில் இருந்து ஆரம்பிக்கும் வண்ணம் அவர் ஈழ தமிழர்களுக்காக தொடர்ந்து போராடி வந்தார். அதற்கு பல இந்திய தலைவர்களும் அவருடன் இருந்த சில அன்ரன் பாலசிங்கம், பொட்டு அம்மன் போன்றோர் அவர்க்கு பக்க பலமாக இருந்து வந்தனர்.
About Me
The sky is not completely dark at night. Were the sky absolutely dark, one would not be able to see the silhouette of an object against the sky.
Follow Me On
Subscribe To My Newsletter
Subscribe for new travel stories and exclusive content.